யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொல்லை – வழக்கினை வடக்கு கிழக்குக்கு வெளியில் மாற்ற கோரிக்கை

361 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த நீதிமன்றத்துக்காவது மாற்றுமாறு பிரதிவாதிகளால் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகியுள்ள 5 காவற்துறை அலுவலர்கள் தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த பிரிதொரு மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு குறித்த காவற்துறை அலுவலர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜுலை மாதம் 30ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதாக அறிவித்தது.

அதேநேரம் இந்த மனுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிர்ப்பு மனுவும் இன்றைய தினம் சமர்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.