பெற்றோலிய அமைச்சில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

332 0

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தடையின்றி எரிபொருட்களை விநியோகிப்பதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவொன்று இன்று(29) உருவாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இப்பிரிவு அமைக்கப்பட்டதன் நோக்கமாகும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.