உயிர் இழப்பை ஏற்படுத்திய கழிவுப் பொருட்கள்!

225 0

காலி – பத்தேகம பாலத்தில் அதிகளவு கழிவுப் பொருட்கள் சிக்கியிருபப்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிக்கியிருக்கும் கழிவுப்பொருட்களை அகற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

காலி போத்தல மற்றும் தெலிகட ஊடான வீதியிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பாலத்தின் கீழ் பகுதியில் பெருமளவில் கழிவுப்பொருட்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நீர் வழிந்தோடுவதிலும் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் குப்பை சிக்கியுள்ளமையால் அந்த பகுதியில் நீர் வழிந்தோட இடமின்றி, நீர் அந்த பகுதியில் உள்ள பிரதேசங்களுக்கு சென்றுள்ளமையால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே,காலி பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமைக்கு இதுவும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.