வெள்ளம் மற்றும் மண்சரிவு குறித்து சரியான தகவல்களை வழங்கினால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும்

238 0

வெள்ளம் மற்றும் மண்சரிவு சம்பந்தமாக கிடைக்கும் தகவல்கள் பேனா அல்லது பென்சிகளில் எழுதி வைத்து தங்களால் வழங்கப்படும் தகவல்களை சரியான முறையில் வழங்கினால் அதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவாதன தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டதில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும்போது சுற்றறி;கைகளை ஒருபுறம் வைத்து விட்டு முதலில் மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் முன் நின்று சேவையாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச அதிகாரிகள் உதவி வழங்கும்போது அச்சமடைய வேண்டாம். அரச அதிகாரிகள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு எந்தவிதமான பிரச்சினை சிக்கல்கள் வந்தாலும் அவர்களை பாதுகாப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் சம்பந்தமான விடயங்களை சரியான முறையில் அறிந்து கொள்வதற்கும் சரியான தகவல்களை வழங்குவதற்கும் தொடர்புகள் அவசியமாகும்.

எனவே தகவல் அறிந்து கொள்வதற்கான தொடர்புகளை சரியான முறையில் அமைத்துக்கொள்வது அவசியமாகும்.

வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகப்பதற்கு சென்ற இராணுவ வீரர் பலியாகியுள்ளார். மக்களை பாதுகாப்பதற்காக அவர் செய்த சேவைக்கு அவருக்கு கௌரவமளிக்கிறேன்.
மேற்படி மக்களுக்கு குடிநீர் வழங்கும் போது சுத்தமான குடிநீரை பெற்று கொடுக்க வேண்டும். இதுவிடயத்தில் நீர் வழங்கல் அதிகார சபை கவனம் செலுத்த வேண்டும்.

மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் மற்றும் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாக சீர் திருத்தி மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பதற்கு மின்சார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவாதன தெரிவித்தார்.