திருகோணமலையில் கேரள கஞ்ஞாவுடன் 3 பேர் கைது

290 0

திருகோணமலையில் கேரள கஞ்ஞாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றது.

இதன்போது அவர்களிடம் இருந்த ஒரு தொகை கேரள கஞ்ஞாவையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 36, 28 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.