அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு – முன்கூட்டிய ஒதுக்கீட்டு தவறு

212 0

அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதன்பொருட்டு முன்கூட்டிய ஒதுக்கீட்டு என்பது தவறான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முன்கூட்டிய ஒதுக்கீட்டு மூலம் இதனை கொண்டுவருவது தவறு.

இவ்வாறு அரசாங்கம் திடீரென முன்கூட்டிய ஒதுக்கீடு மூலம் அமைச்சர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய கொண்டுவரும் தீர்மானத்தால் மக்கள் கடும் விசனமடைவர்.

அது அரசாங்கத்திற்கும் தேவையற்ற சிக்கல்களை தோற்றுவிக்கும் எனவும் அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.