அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது ஹெலிகொப்டரில் இருந்து விழுந்து இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த விமானப்படை வீரர் உள்ளிட்ட இருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கு விமானப்படை ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.