மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள, அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று நேற்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்ற பிரதிநிதிகளுக்கிடையில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.
அதிகாரப் பகிர்வு, மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் தன்மைகள் தொடர்பிலும் விரைவில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.