தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை

227 0

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, பிரதமர் மோடியை கோரியுள்ளார்.
புதுடில்லியில் வைத்து முதலமைச்சர் பழனிச்சாமி, பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.

இதன்போது இந்த விடயம் குறித்த மனு ஒன்றை பிரதமரிடம் அவர் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தீர்வின்றித் தொடரும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரைவாக செயற்படுமாறும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.