மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் எறியூட்டப்படுகின்றமையினால் மக்கள் பாதிப்பு

226 0

மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு எறியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுப்பொருட்கள் இன்று காலை எறியூட்டப்பட்டமையினால் அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காணப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள சுமார் 40ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு அசெகரியங்களுக்கும் முகம் கொடுத்தனர்.

இந்த நிலையில் காலை ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் குப்பை எறியூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மற்றும் மன்னார் நகர சபை அதிகாரிகள் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னார் பௌஸர் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு தீ அனைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தொடர்ச்சியாக பல வருடங்கள் குறித்த பகுதியில் குப்பை எறியூட்டப்படுவதாகவும்,இவ்விடையம் தொடர்பில் மன்னார் நகர சபை உற்பட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித மாற்று வடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக கழிவுப்பொருட்கள் எறியூட்டப்படுகின்றமையினால் இப்பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பினித்தாய்மார்கள் என அனைவரும் பாதீக்கப்படுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள மக்கள் சுவாச நோய் மற்றும் தோல் நோய்க்கும் உள்ளாகுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
மன்னார் நகர் பகுதியில் உள்ள கழிவுகளைத்தவிர வைத்தியசாலையில் உள்ள கழிவுப்பொருட்களும் கொட்டப்பட்டு எறியூட்டப்படுவதாகவும், இதனால் இப்பகுதி மக்கள் சுவாசிப்பதற்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது காற்றுக்காலம் என்பதினால் உயிரிழத்த உயிரினங்கள் கொண்டு வந்து குப்பைகளுடன் போடுவதினால் பாரிய துர்நாற்றம் ஏற்படுவதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே எதிர் வரும் காலங்களில் இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எறியூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த மன்னார் நகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.