இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயால் 115 பேர் உயிரிழப்பு

230 0

இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரிகரித்துள்ளது.

மேலும் இதுவரையில் 48 ஆயிரத்து 368 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகபடியாக 20 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 782 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் மொத்தமாக 4 ஆயிரத்து 25 குழுக்கள் டெங்கு நுளம்பு பரவலை கண்காணிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.