நாட்டில் அமைதியை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக அரசியல் ரீதியாக லாபம் தேடும் சில குழுக்கள், இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையை அறியமுடிகிறது.
இவ்வாறான குழுக்களுக்கு எதிராக சட்டத்தை உரிய வகையில் அமுலாக்குமாறு உரியத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அமைதியை சீர்குலைக்க இந்த தரப்புக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.