இனவாதத்தை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முழு மூச்சாக செயற்பவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நீதித்துறையினுடைய திருத்தச்சட்டம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
குரல் சால்ர்ஸ்
கடந்த 18 ஆம் திகதி பளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடானது முப்படையினரையும் மீறி எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.
குரல் ஸ்ரீதரன்
இதேவேளை, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.
குரல் சாந்தி
இதேவேளை, எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனால் பட்டதாரிகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது.
இந்த பிரேரணை தொடர்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், இளைஞர் யுவதிகளின் பிரச்சினையை வெறுமனே தட்டி கழித்துவிட முடியாது என குறிப்பிட்டார்.
குரல் சிறிநேசன்
இதனிடையே இந்த ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன், தற்போதைய அரசாங்கம் பட்டதாரிகளின் நியமனத்தில் கால தாமதத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தினார்.
குரல் சீனி