காணாமல் போனதாக கூறப்பட்ட 19 படகுகளும் கரை திரும்பின

237 0

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த 19 படகுகளும் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகுகளில் இருந்த 67 பேரும் எந்த வித பாதிப்பும் இன்று பாதுகாப்பான முறையில் கரையை வந்தடைந்ததாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

புன்னகுடா மற்றும் சவுக்கடி ஆகிய பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 19 படகுகள் காணாமல் போனதாக கடற்படைக்கு கிடைத்த தகவலை அடுத்து தோடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய குறித்த படகுகளை தேடுவதற்காக டோரா இயந்திர படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் சமிந்த வலாக்குலுகே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், குறித்த படகுகள் தற்போது பாதுகாப்பான முறையில் கரையைவந்தடைந்ததாக கடற்படை அறிவித்துள்ளது.