கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக ஆயிரத்து 700 நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கில் காணப்படும் 4 ஆயிரத்து 784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதனை கட்டம் கட்டமாக நிரப்புவதற்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய முதற்கட்ட நியமனத்தின் போது நியாயபூர்வமான காரணங்களுடைய பட்டதாரிகளை போட்டிப் பரீட்சை இன்றியும் சிலரை போட்டிப் பரீட்சை மூலமாகவும் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களின் போது பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக நிர்ணயிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.