நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வின் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை சீர்திருத்தம் ஒன்றை மேற்கொண்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
புதிய யுகத்துடன் நாடு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி அமைச்சரவை சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்.
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வின் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சரவை தொடர்பாக கண்காணிப்புக்களை மேற்கொண்டு உரிய தீர்மானங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பின்னிற்க போவதில்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.