வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சா மீட்பு

239 0

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 50 கிலோ கிராம் கேரளா கஞ்சா யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்பரப்பில் வைத்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைக்க தகவலையடுத்து இந்த கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரளா கஞ்சாவை கடத்தி வந்த படகு தப்பிச் சென்றிருக்க கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

படகு மற்றும் சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்காக கடற்படை மற்றும் காவற்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.