நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை – ரவி கருணாநாயக்க

284 0

நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பீ.பீ.சீ. சிங்கள சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிலரின் அழுத்தம் காரணமாகவா? தாங்கள் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டீர்கள் என பீ.பீ.சீ சிங்கள சேவையின் ஊடகவியலாளர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க பொறாமை கொண்ட சிலரால் தமது நிதியமைச்சு பதவி பறிபோனதாக குறிப்பிட்டார்.