மொரவெவ பிரதேசத்தில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

217 0

மொரவெவ பிரதேசத்தில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொரவெவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய திருகோணமலையில் இருந்து மொரவெவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.