தேர்தல் குறித்த தீர்மானம் எப்போது – பிரதமர் ரணில்

224 0

தேர்தல் சட்டம் தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததன் பின்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவது குறித்து தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் சட்டம் தொடர்பாக கட்சித் தலைவர்களிடையே இடம்பெறும் கலந்துரையாடலில் ஏற்படும் இணக்கப்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததன் பின்னரே அடுத்த நடவடிக்கைக்கு செல்ல முடியும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.