அநுராதபுரம் – தந்திரிமலை மஹா ஹல்னேவ பிரதேசத்தில் கடந்த 10 தினங்களில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் வனஜீவராசிகள் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
நிலவி வரும் வரட்சியுடனான காலநிலை காரணமாக யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.
இதனால், யானைகளை விரட்டியடிப்பதற்காக ஊர்வாசிகள் மின்சாரம் மூலமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்காரணமாகவே யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
யாணைகள் இறந்து கிடந்த பிரதேசங்களை காவல்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், அந்த காணி உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.