இந்திய கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பல் கொழும்பில்

289 0

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சுமேதா’ எனும் யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இன்று காலை குறித்த கப்பல் கொழும்பு துறை முகத்தை வந்தடைந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த கப்பல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது கடற்படையினரின் பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.