விரோதமாக மணல் அகழ்வு – 12 பேர் கைது

277 0

கிளிநொச்சி கல்லாறு காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று கல்லாறு பிரதேசத்தில் வைத்து தருமபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீண்ட காலமாக சட்ட விரோதமாக நடைபெற்று வரும் இந்த மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரிகளக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணல்கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.