வௌ்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: ஒருவர் கைது

231 0

வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கட்டடத்தின் உரிமையாளரே பொலிஸில் சரணடைந்த நிலையில் இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட கட்டடம் உரிய தரத்தில் அமைக்கப்படவில்லை என இவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இதனை நிர்மாணிப்பதற்கான உரிய அனுமதி தம்மிடம் இருந்து பெறப்படவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, மூன்று மாடிகள் அமைக்கவே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், எனினும் ஐந்து மாடி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதோடு, மேலும் இரு மாடிகள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.