வெள்ளவத்தை அனர்த்தம் – மீட்பு பணிகள் இடைநிறுத்தம்

315 0

வெள்ளவத்தை அனர்த்தம் இடம்பெற்ற கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை குறித்த பெண்ணின் உடலம் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தார்.

உடலமாக மீட்கப்பட்டவர் 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதனிடையே, கட்டிட சரிவு மீட்பு பணிகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் 3 பேர் பலியானதாகவும் 21 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட வெள்ளவத்தை அனர்த்தம் இடம்பெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் காவல்துறையில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் அவர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்தே அவருக்கு இந்த விளக்கமறியல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி வெள்ளவத்தையில் சாலிமன் வீதியிலுள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 21 பேர் வரையில் காயமடைந்துடன், இதுவரையில் 3 பேரின் உடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த கட்டிடமானது, அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.