இலங்கையின் முதல் முறையாக ஐஸ்… இரு பெண்களுக்கு விளக்கமறியலில்..!

290 0

வத்­தளை, எல­கந்த பிர­தே­சத்தில் 20 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஐஸ் என அழைக்­கப்­படும் கிரிஸ்டல் ரக போதைப்­பொ­ரு­ளுடன் கைது செய்யப்பட்ட 2 பெண்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்­போது 40 வய­தான இரண்டு பெண்­களே மது­வரி திணைக்­கள நட­வ­டிக்கை பிரி­வி­னரால் நேற்று முன்­தினம் இரவு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் குறித்த பெண்­க­ளிடம் இருந்து சுமார் 250 கிராம் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், ஐஸ் என்ற இந்த போதைப்­பொருள் இலங்­கையில் முதல் முறை­யாக கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக மது­வரி திணைக்­கள நட­வ­டிக்கை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரிசோதகர் பீ.என்.ஹேமந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.