வத்தளை, எலகந்த பிரதேசத்தில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் என அழைக்கப்படும் கிரிஸ்டல் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 2 பெண்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது 40 வயதான இரண்டு பெண்களே மதுவரி திணைக்கள நடவடிக்கை பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பெண்களிடம் இருந்து சுமார் 250 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், ஐஸ் என்ற இந்த போதைப்பொருள் இலங்கையில் முதல் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள நடவடிக்கை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.என்.ஹேமந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.