பணம் அறி­வி­டப்­பட்டால், 1988 என்ற அவ­சர இலக்­கத்­துக்கு தெரி­விக்­கவும்

214 0

கல்வி அமைச்சின் அனு­ம­தி­யின்றி, பாட­சாலை மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து, அப்­பா­ட­சாலை நிர்­வா­கத்­தி­னரால் பணம் அறி­வி­டப்­பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவ­சர அழைப்­பி­லக்­கத்­துக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்தித் தெரி­விக்­கு­மாறு, கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இதே­வேளை, கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தரப் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த நிலையில், உயர்­த­ரத்­துக்­கான கல்­வியைத் தொடர்­வ­தற்­காக, வேறு பாட­சா­லை­க­ளுக்குச் செல்லும் மாண­வர்­க­ளுக்­கான நேர்­முகப் பரீட்சை மற்றும் அம்­மா­ண­வர்­க­ளிடம் இருந்து, பாட­சா­லை­யினால் அற­வி­டப்­படும் தொகை தொடர்­பான முழு விவ­ரங்கள் அடங்­கிய அறிக்­கையை, தன்­னிடம் கைய­ளிக்­கு­மாறு கல்வி அமைச்சர் பணிப்­புரை விடுத்­துள்ளார்.

சில பாட­சா­லை­களில் நடத்­தப்­படும் நேர்­முகப் பரீட்­சைகள் மற்றும் மாண­வர்­க­ளிடம் அற­வி­டப்­படும் பணம் தொடர்பில் கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே, மேற்­படி அறிக்­கையைத் தயா­ரித்து தன்­னிடம் சமர்ப்­பிக்­கு­மாறு, அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், உரிய அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார். பாட­சா­லை­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள தொகைக்கு மேல­தி­க­மாக, பாட­சாலை அபி­வி­ருத்­திக்­கென எவ­ரேனும் பணம் திரட்­டு­வார்­க­ளாயின், அதற்கு கல்வி அமைச்சின் செய­லா­ளராலோ அல்­லது கோட்டக் கல்வி வல­யத்தின் செய­லா­ள­ராலோ, அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என்றும், கல்வி அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அவ்­வா­றின்றி, பாட­சாலை மாண­வர்க­ளிடம் பணம் அறி­வி­டு­வ­தற்கு, உரிய அதி­கா­ரி­க­ளுக்கு எவ்­வித அதி­கா­ரமும் இல்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.