யாழில் கடல் தொழிலுக்கு போன மீனவர்கள் இந்தியாவில் மீட்கப்பட்டுள்ளனர்

231 0

கடந்த 15 ம் திகதி பருத்தித்துறை கடலில் இருந்து தொழிலுக்கு போன இரு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என பொலீஸ் நிலையத்தில்.அவர்களது உறவினர்களினால்  முறையிடப்பட்டதையடுத்து இன்றைய தினம் இந்தியா  நாகை ஆர்காட்டுத்துறை  கடற்கரைப்பகுதியில் படகு பழுதடைந்த நிலையினில்  கரையொதுங்கிய நிலையில்  இந்திய மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வினோத்(29) தீபன் (39) ஆகியோராவர்.மேலதிக விசாரணைகளை இந்திய கரையோர படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.