விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்

267 0

இன்று மதியம்  விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில்   வீசிய  சுழல் காற்றினால்  குறித்த பகுதியில் உள்ள  தற்காலிக வீடு ஒன்றின்  கூரை  சேதமடைந்துள்ளது  வீட்டின் மீது போடப்பட்டிருந்த  தகரம் காற்றினால் பிடுங்குப்பட்டு செல்லும் பொழுது குறித்த வீட்டில்  தாயும் இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளனர் இருப்பினும் துரதிஸ்ட வசமாக  யாருக்கும் காயங்கள் எவையும் ஏற்ப்படவில்லை

 நாதன் திட்டம்  கிராமத்தை பொறுத்த வரையில்  மீள்குடியேற்றம்  செய்யப்பட்டது  முதல் மக்கள் இவ்வளவுகாலமும்  தற்காலிக வீடுகளிலையே வசித்து வருகின்றனர் சென்ற மாதம் அளவிலையே தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான   நிரந்தர வீட்டுத்திட்டம்  வழங்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இம்மாதத்தில் மட்டும் இலங்கையின் பல பாகங்களில் காற்றினால் மட்டும் பல வீடுகள்  சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.