விபத்தில் இருவர் பலி

238 0

கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியின் கந்தகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியும் எதிர்திசையில் பயணித்த மற்றுமொரு பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

விபத்தில் பலியானவர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 27 வயதான இளைஞர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.