கட்டார் வானூர்தி தொழிநுட்ப பிரச்சினை காரணமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்

258 0

கட்டார் வானூர்தி சேவைக்கு சொந்தமான வானூர்தி ஒன்று தொழிநுட்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குறித்த வானூர்தியில் 208 பயணிகளும் 15 வானூர்தி பணியாளர்களும் இருந்துள்ளனர்.

குறித்த வானூர்தி தாய்லாந்தில் இருந்து டோஹா நோக்கி பயணித்த நிலையில் வானூர்திக்குள் புகை ஏற்பட்ட நிலையில் இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

நிலைமை சீர்செய்யப்பட்டு பின்னர் குறித்த வானூர்தி மீள புறப்பட்டுச் சென்றுள்ளது.