அரசியல் ரீதியாக எடுக்க வேண்டியுள்ள முக்கியமான சில தீர்மானங்களை மேற்கொண்டதன் பின்னர் அந்த தீர்மானங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.
அவ்வாறான முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக அவை தொடர்பில் பகிரங்கப்படுத்த வேண்டி தவை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சிக்கு எதிரான தரப்பினர் சம்பந்தமாக எதிர் வரும் நாட்களில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்