இலங்கையில் முதல் முறையாக முதல்தர போதை பொருளுடன் பெண்கள் இருவர் கைது

275 0

இலங்கையின் முதல் முறையாக கிறிஸ்டல் மெத் (Crystal Meth) எனப்படும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த 250 கிராம் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் பெறுமதி 20 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டல் மெத் எனப்படும் குறித்த ஐஸ் ரக போதைப்பொருளானது உலக போதைப்பொருள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.