பஸ்சுடன் மோதிய ஜீப் – 3 பொலிஸார் வைத்தியசாலையில்

339 0

கண்டி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் மீது, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, காயமடைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பஸ் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.