சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

321 0

சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் விவசாய பாட ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்ற வயோதிப பெண்மணியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியராக கடமையாற்றிய இவர் ஓய்வு பெற்று தற்போது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் வீட்டு கூரையின் ஓட்டை பிரித்து உள்நுழைந்த திருடர்களினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு இவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.