டெல்லியில் 16 வயது பெண்ணை பாலியல்வல்லூறவு புரிந்து எரித்து கொன்ற வாலிபர்கள் கைது

404 0

201608011041592252_Delhi-Teen-Allegedly-molested-Strangled-And-Burnt-By-Men_SECVPFடெல்லியில் 16 வயது இளம் பெண் கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் தாய்-மகள் கற்பழிக்கப்பட்டனர். கடந்த மாதம் டெல்லியில் 2 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.இது போன்ற சம்பவம் தொடர்ந்து டெல்லியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 16 வயது இளம் பெண் ஒருவர் கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்து இருக்கிறது.
தெற்கு டெல்லியை சேர்ந்த அந்த பெண் கடந்த வியாழக்கிழமை எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பிரேத பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணை கற்பழித்ததுடன் அவளின் உடலில் தீவைத்து எரித்து கொன்றது தெரிய வந்தது. அதை வைத்து இரு வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

இந்த வாலிபர்கள் இருவரும் அந்த இளம் பெண்ணின் தோழி ஒருவரையும் ஏற்கனவே கற்பழித்து உள்ளனர் என்ற விவரமும் தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.