திருகோணமலையில் விபத்து – ஒருவர் பலி

264 0

திருகோணமலை. நிலாவெளி பிரதான வீதியில் இன்று மாலை துவிச்சக்கர வண்டியுடன் சிற்றுந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

நிலாவெளி கோணேஸபுரி பகுதியை சேர்ந்த 36 வயதானவரே விபத்தில் மரணமடைந்தார்.

சம்பவம் தொடர்பில் சிற்றுந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சடலம் திருகோணமலை பெது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.