முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டியை கண்டிப்பதாக, ஜனநாயக போராளிகள் கட்சி அறிவித்துள்ளது(காணொளி)

314 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில், போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று முல்லைதீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீரர்களை தயார்ப்படுத்துவதை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால் அதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப் போட்டி என்ற பெயரில் நடாத்துவதை ஜனநாயக போராளிகள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.