காவல்துறை அலுவலரின் உடலத்திற்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

258 0

பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேந்த அலுவலரின் உடலத்திற்கு ஜனாதிபதி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது இறந்த காவற்துறை அதிகாரிக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டமைக்கான கௌரவ சின்னத்தையும் ஜனாதிபதி இதன்போது அவருக்கு சூட்டினார்.

அண்மையில் பிலியன்தலை பகுதியில் காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது அவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காவற்துறை அலுவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடங்களாக 4 பேர் காயமடைந்தனர்.

பின்னர் அவர்களுள் சிகிச்சிசை பெற்று வந்த குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.