மலையக பகுதிகளில் வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பம்

470 0

மலையக பகுதிகளில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இடாப்பு திருத்தும் பணி எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் சகல வாக்காளர்களும் தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளுமாறு வலியுருத்தபட்டுள்ளது.

குடும்ப தலைவர்கள் தமது குடும்ப வாக்காளர்கள் பட்டியலை கிராம சேவையாளர்களிடமிருந்து பெற்று அதனை பூர்த்திசெய்து கிராமசேவையாளர்களிடம் ஜுன் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கபடுகிறது.