5 மாதங்களில் 44 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

332 0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44 ஆயிரத்து 623 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இவற்றுள் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இனங்கானப்பட்டுள்ளதுடன், அது நூற்றுக்கு 41 தசம் 48 வீதமாக உள்ளது.

இதனிடையே அதிகமான டெங்கு நோயாளர்கள் மார்ச் மாதமளவிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மார்ச் மாதத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 420 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.