தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பு

240 0

தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்;ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் விரைவில் நடைமுறைப்பபடுத்தப்படவுள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட தாதியர் பயிற்றுவிப்பாளர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.