எந்த மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது – மஹிந்த அமரவீர

366 0

எந்த மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்த வட மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் எஸ் எம் ரஞ்சித், மாகாண சபையில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து அவருடன் கலந்துரையாடியதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்முறை மூலம் மாகாண ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.