கொழும்பு கோட்டையில் மனித எச்சங்கள்!

366 0

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிட தொகுதியின் அருகாமையில், மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட அகழ்தல் வேலைத்திட்டத்தின் போது இவ்வாறு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கோட்டை காவற்துறை இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.