வாகனங்களை களவாடிய ஒருவர் கைது

239 0

கடந்த காலங்களில் வாகனங்களை களவாடி வந்த ஒருவர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்ட குற்றவிசாரணை பிரிவினரால் சந்தேகத்திற்கிடமாக வான் ஒன்று பரிசோதிக்கப்பட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 1.25 கிராம் ஹெரொயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் பல்வேறுபட்ட விலாசங்கள் மற்றும் பெயர்களை பயன்படுத்தி நாட்டின் பல பாகங்களில் வாகனங்களை கொள்ளையிட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறைச்சாலையிலிருந்த தப்பிச் சென்றவர் எனவும், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் 3 திறந்த பிடியாணைகள் விதிக்கப்பட்டவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.