ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 392 வழக்குகள் பதிவு

216 0
கடந்த 5 வருட காலப்பகுதியில் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் 392 வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை வழக்கு பதிவுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் ட்ரான்பேரன்ஷி இன்டர்நேஷனல் நிறுவனம் மேற்கொண்ட கோரிக்கையின் போது ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு இந்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 106 பேர் வரை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.