பிரதமர் ரணில் பீஜிங் நகரை சென்றடைந்துள்ளார்

229 0

சீன – பீஜிங் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் பீஜிங் நகரை சென்றடைந்துள்ளனர்.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் உள்ளிட்ட குழுவினரை நகரின் அரசியல் ஆலோசனை சம்மேளனத்தின் நிலையியல் சபையின் உப தலைவர் லீ ஜேங் யூ, சீனாவுக்கான இலங்கை தூதுவர் யீ ஷியயெங்லியங் , இலங்கைக்கான சீன தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

பிரதமர் காரியாலயம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நாளை (14) சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவின் அரசியல் பிரமுகர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.