நாட்டிற்கு பயன்மிக்க அமைச்சரவை திருத்தம் விரைவில்

241 0

நாட்டிற்கு பயன்மிக்க வகையில் அமைச்சரவை திருத்தம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார, போசனை மற்றும் தேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்கம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய மருந்தாளர்கள் 52 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார். இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், அரச பணியாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார சேவையாளர்களின் மேலதிக நேர பணி கொடுப்பனவுக்காக இந்த வருடத்தில் மாத்திரம் 4 பில்லியன் ரூபா மேலதிக நிதி அவசியமாக இருப்பதாக நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக அவசியமான சுற்று நிரூபம் எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சர் தெரிவித்தார்.