தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

354 0

82வது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று எண்பத்தி இரண்டாவது நாளாக தொடர்கிறது.

கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக தொடர்கிறது. தங்களை அனைவரும் கைவிட்டுள்ளதாகவும், 82 ஆவது நாளாக தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் காணாமல் ஆக்ப்பட்ட தங்களின் உறவுகளுக்காக அவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து கவனயீர்ப்பை ஆரம்பித்த போதும் இந்த போராட்டததை எவரும் கண்டுகொள்ள வில்லை என்றும் கவலை தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என  தெரிவிக்கின்றனர்