அழுதவாறே செய்தி வாசித்த பெண்

288 0

நேரடி செய்தி ஒளிபரப்பின் போது செய்தி வாசிப்பாளர் ஒருவர் அழுதவாறே செய்தி வாசித்த சம்பவமானது இஸ்ரேலில் நடைபெற்றுள்ளது.

இஸ்ரேலின் ‘செனல் 1’ என்ற தொலைக்காட்சியில் கடமைப்புரியும் சூலா இவோன் என்றப் பெண்ணே இவ்வாறு அழுதுக்கொண்டே செய்தியை வாசித்துள்ளார்.

குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தை மூடிவிடுமாறு இஸ்ரேல் நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாகவும்,இதனை செய்தியாக வாசிக்கும் போதே குறித்த பெண் அழுதுவிட்டதாகவும் இஸ்ரேல் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 49 வருடங்களாக இயங்கிவரும் குறித்த நிறுவனம் மூடப்படவுள்ள நிலையில், இதுவே தமது நிறுவனத்தின் கடைசி செய்தி என்றும் குறித்த பெண் செய்திவாசிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதுடன், இது குறித்த வீடியோவானது இணையங்களில் வைரலாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனமானது இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததொன்று என்றும்,இஸ்ரேலின் ஊடகங்களை கட்டுப்படுத்தும் புதிய கொள்கைகளுக்கு அமைய இந்த நிறுவனத்தை மூடுவதற்கான தீர்மானத்தை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் எடுத்துள்ளதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவித்துள்ளன.